districts

img

சாதி வன்கொடுமைகளை தடுத்திடுக:

கள்ளக்குறிச்சி,செப்.24- காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வேலூர் கோட்ட 36 வது பொது மாநாடு கள்ளக்குறிச்சியில் செப்,23,24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டிற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்டை தலைவர் பழனிராஜ் தலைமை ஏற்று மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக  சேலம் மெயின் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி கிளை அலுவலகத்தி லிருந்து  சுந்தர விநாயகர் கோவில் தெரு வழியாக மாநாட்டு அரங்கம் வரை காப்பீட்டு ஊழியர்கள் பங்கேற்ற  பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைத் தலைவர் ஆனந்தன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இணைச் செயலாளர் கிரிஜா, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பு துணைத்தலைவர் முத்துக்குமார சாமி, தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு சுரேஷ் மற்றும் சுகு மாரன். பாஸ்கரன், சிலம்பன்,  செந்தில், சரிதா சனில்,  கோவிந்தன் ஆகியோர்  மாநாட்டில் பேசினர். தீர்மானங்கள் எல்ஐசி பிரிமியம் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்திட வேண்டும், சமூக நல்லிணக்கம் மக்கள் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும், தீண்டாமை சாதிய பாகுபாடுகள் களையப்பட வேண்டும், சாதியின் பெயரால் நடைபெறும் வன்கொடுமைகளும் ஆணவக் கொலை களும் தடுத்து நிறுத்த வேண்டும், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. வரவேற்பு குழு செயலாளர் கள்ளக்குறிச்சி கிளை பாலாஜி நன்றி கூறினார். புதிய நிர்வாகிகள் வேலூர் கோட்டத் தலைவராக எஸ்.பழனிராஜ், செயலாளராக எஸ். ராமன், பொருளாளராக கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.