districts

img

காலிப்பணியிடங்களை முறையான காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் திருவள்ளூர் அரசு ஊழியர் மாநாட்டில் தீர்மானம்

திருவள்ளூர், நவ. 19- தமிழ்நாடு அரசு துறைகளில் உள்ள 4.80 லட்சம் காலிப்பணியிடங்களை முறை யான காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என அரசு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட மாநாடு வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட 14 வது மாவட்ட மாநாடு செவ்வாயன்று (நவ.19), திரு வள்ளூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் க.திவ்யா தலை மையில்  மாவட்ட இணைச் செயலாளர் கௌ.மில்கிராஜாசிங் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் க.மோகநாதன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோ.இளங்கோவன் துவக்க வுரையாற்றினார். மாவட்ட செயலாளர் க.வெண்ணிலா வேலை அறிக்கையையும், மாவட்ட பொருளாளர் பா.மணிகண்டன் வரவு செலவு கணக்கையும்  முன்மொழிந்தனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஏ.மணிகண்டன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சீ.காந்திமதிநாதன், துறைவாரி சங்கங்களின் நிர்வாகிகள் அ.மணிசேகர், ஜெய்கர்பாபு, கோவிந்தன், யோகராஜ் ஆகியோர்  வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செய லாளர் உ.சுமதி மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.மாநில செயற்குழு உறுப்பினர் சி.மோகன்தாஸ் நன்றி கூறினார். முன்னதாக பணி ஓய்வு பெற்ற முன்னாள் நிர்வாகிகளுக்கு கதராடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மாவட்டக்குழுதேர்வு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவராக க.திவ்யா, செயலாளராக க.வெண்ணிலா, பொருளாளராக பா.மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், கொரோனா கால பேரிடர் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட 11 மாத கால 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகங்கள், கிராம உதவியாளர் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கி அரசு ஊழியர்களாக்க வேண்டும், தமிழ்நாடு அரசின் பள்ளிக் குழந்தைகளின் காலை உணவு திட்டத்தை அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், அரசு விதிமுறைகள்படி அனைத்து அரசு துறைகளிலும் ஊழியர்கள் குறை தீர்க்கும் கூட்டங்களை நடத்த வேண்டும், புதிய மருத்துவ காப்பீட்டில் பிரசவ சிகிச்சை, புற்றுநோய் தொடர் சிகிச்சை, வலிப்பு நோய்கள், சிறப்பு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளையும் பட்டியலில் சேர்க்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.