districts

img

திருவொற்றியூர் 4ஆவது வார்டில் உயர்நிலை நீர்தேக்க தொட்டி பகுதிசபை கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, பிப். 5- திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டுகுட்பட்ட பிருந்தாவன் நகர், காமராஜ்  நகர், காந்தி நகர், நேத்தாஜி நகர், கன்னிய லால் லேஅவுட், கிரிஜா நகர் வசந்தம் நகர்  பகுளிகளுக்கான பகுசபை கூட்டம் எர்ணா வூரில் நடைபெற்றது. வார்டு குழு உறுப்பினர் கள் ஆறுமுகம், சஜிஜான் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர  தீர்வு காண சண்முகபுரம் அருகே உள்ள அரசு நிலத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி  கட்ட வேண்டும், எர்ணாவூர் மேம்பாலத்தில் இருந்து மணலி மற்றும் எண்ணூர் செல்லும்  நெடுஞ்சாலையில் விபத்துக்கள் ஏற்படா திருக்க ரவுண்டானா அமைக்க வேண்டும். துருபிடித்த தெருவிளக்கு கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். தார் சாலை களை தரமாக அமைக்க வேண்டும். மழைநீர்  கால்வாய் விடுபட்ட பகுதிகளில் அமைக்க வேண்டும். விம்கோ ரயில் நிலையம், மெட்ரோ பணிமனை ரயில் நிலையம் செல்ல  ஐடிசி அருகே உள்ள கேட்டை பொது மக்களுக்கு திறந்து விட வேண்டும். பிருந்தாவன் நகரில் விடுபட்ட சாலைகள் போடப்பட வேண்டும். பழுதடைந்த மின்மாற்றிகளை சீரமைக்க வேண்டும். காமராஜ் நகர் 6ஆவது தெருவில் உள்ள மின் பில்லரை மாற்றி அமைக்க வேண்டும். நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும். கன்னியலால் லேஅவுட்டில் மழைநீர் வடி கால்வாய் அமைக்க வேண்டும்,  3 இடங்களில்  கை பம்பு போட வேண்டும். கிரிஜா நகரில் புதைவட கேபிள் அமைக்க வேண்டும். எர்ணா வூர் முருகன் கோயில் அருகே உள்ள பூத்தில் காவலர்களை நியமிக்க வேண்டும். கண்டனர் லாரிகள் எர்ணாவூர் வழியாக செல்வதை தடுக்க வேண்டும். வரி  செலுத்துவதற்கு தமதமானால் கூடுதல் 1 விழுக்காடு வட்டி வசூலிப்பதை கைவிட  வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் முன் வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு மின்துறை அலுவலர் நாகராஜ்,  குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரற்றல் உதவி பொறியாளர் மதன்ராஜ், சுகாதார துறை ஆய்வாளர் கார்த்திக், வருவாய் துறை  அலுவலர் ராஜி, உதவி பொறியாளர் அன்னலட்சி ஆகியோர் பதில் அளித்தனர்.  இறுதியாக தீர்மானங்களை மாமன்ற உறுப்பி னர் தொகுத்து பேசி முன்மொழிந்தார். கூட்டத்தில் நகர் நிர்வாகிகள் ரமேஷ், சடகோபன், நிரஞ்சன் பட்நாயக், சுப்பிர மணி, ,தேவதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.