சென்னை, அக். 25- வாடகை கொடுக்க முடிய வில்லை, வீடு எப்போது கட்டித் தருவாய் என குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் ஆவேசப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராயபுரம் கிழக்கு கல்லறை சாலை பகுதியில் (51ஆவது வட்டம்) குடிசை மாற்று வாரியம் அங்கிருந்த 928 குடியிருப்புகள் சேதமடைந்த தைத் தொடர்ந்து புதிதாக குடியிருப்புகள் கட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்தது. இதை யடுத்து கடந்த ஆண்டு மே மாதம் கணக்கெடுப்பு நடத்தி, புகைப்படம் எடுக்கும் பணி துவங்கியது. பின்னர் கடந்த மார்ச் மாதம் குடியிருப்பு வாசிகள் வீட்டை காலி செய்து வாடகை குடியிருப்பு களுக்கு சென்றனர். ஆனால் 8 மாதங்களாகியும் பழைய குடி யிருப்புகள் இதுவரை இடிக்கப்பட வில்லை. இதனால் பலரும் வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பல முறை அதிகாரிகளிடம் முறை யிட்டும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர், இந்நிலையில் குடியிருப்புவாசி கள் உடனடியாக பழைய குடியிருப்பு களை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகளை கட்ட வலியுறுத்தி கல்லறை சாலையில் புதனன்று (அக். 25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். குடியிருப்போர் நலச்சங்கத்தின் தலைவர் டி.வெங்கட் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவுரத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன்,
செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், என்.குமார் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர் பேசினர். இதற்கிடையே போராட்ட களத்திற்கு வந்த நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ராஜேந்திரன் பேசுகை யில், தற்போது விடுபட்டவர்களில் 105 பேருக்கு இன்னும் இரண்டு வாரங்களில் ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். மீதமுள்ள 53 பேருக்கு அவர்களின் டாக்கு மெண்ட் முறையாக இல்லை. அதுவும் அவர்களிடம் பெறப்பட்டு அவர்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தற்போது தரைதளம் பார்க்கிங் வசதியுடன் 4,17 சதுர அடியில் 1,500 வீடுகள் கட்டப்பட உள்ளன. இங்கே கூடுதலாக குடிசை அமைத்து குடியிருக்கும் நபர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பலர் இல்லாததால் முழுமையான கணக்கெடுப்பு நடத்த முடிய வில்லை. மீண்டும் முழுமையான கணக்கெடுப்பு நடத்தி, அவர்கள் இங்கே குடியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கும் அருகிலேயே குடியிருப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதில் சங்கத்தின் செயலாளர் எம்.ராஜா, பொருளாளர் லோ.மோகன், துணை செயலாளர் எம்.ேஜாதிபாசு, ஏ.ரகு (திமுக), ஜி.கோபி (காங்கிரஸ்), எஸ்.மகிமை தாஸ் (புரட்சி பாரதம்), சங்க நிர்வாகிகள் பி.செல்வம், ெஜ.துரை, எம்.அண்ணாமலை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.