districts

 சென்னை பட்டினப்பாக்கத்தில் மயில் ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேளச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்

சென்னை,மே 17-

   சென்னை பட்டினப்பாக்கத்தில் லீத் கேஸ்டல் தெருவில் செவ்வாயன்று மயில் ஒன்று இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வேளச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வனத்துறை ஊழியர்கள் வந்து இறந்து கிடந்த மயிலை பரிசோதித்தனர். உடலில் காயங்கள் எதுவும் இல்லை. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இறந்து இருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் வேறு பாதிப்பு காரணமாக உயிர் இழந்ததா என்று ஆய்வு செய்ய வனத்துறை அலுவலகத்திற்கு இறந்து போன மயிலை கொண்டு சென்றனர்.