விழுப்புரம், ஏப். 6- வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வரும் மே 2ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் திருவிழா நடக்க உள்ளது. இதையொட்டி தென்னிந்திய திருநங்கை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணா வியாழனன்று (ஏப். 6) விழுப்புரத்தில் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் திருவிழா மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெற்று வந்தது, அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் திரு நங்கைகளுக்கு அடைக்கலம், சமூக அந்தஸ்து, உலக அளவில் நல்ல பெயரை பெற்றுத் தந்தது என்று அவர் கூறினார். இந்நிலையில் இப்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டு மாவட்டங்களாக பிரிந்து உள்ள நிலையில் கூத்தாண்டவர் கோயில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருப்பதால், விழுப்புரம் மாவட்டத்தை புறக்கணிக்காமல் பாதி நிகழ்ச்சிகளை விழுப்புரம் மாவட்டத்திலும் நடத்து வது என முடிவு செய்துள்ளோம் என்றார். வரும் 1ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மிஸ் கூவாகம் 2023 நிகழ்ச்சியின் முதல் இரண்டு சுற்றுகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறு கிறது, அதனைத் தொடர்ந்து விழுப்புரம் தளபதி திடலில் மிஸ் கூவாகம் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி மாலை 7 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சமூக நலத்துறை இயக்குநர் ரத்தினா, மாவட்ட ஆட்சியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். இந்தத் திருவிழாவில் உலகம் முழுவதிலும் இருந்து திருநங்கைகள் கலந்து கொள்கின்றனர். கூத்தாண்டவர் கோயிலுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்தியா முழுவதும் திருநங்கைகளை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் அனை வருக்கும் தங்க வீட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும். கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் திரு நங்கைகளுக்கு படிக்க மற்றும் வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட இட ஒதுக்கீடு வழங்கி யுள்ளது. எனவே தமிழ்நாட்டிலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆட்சியர் அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனை கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள உணவகங்களை திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு செய்தால் அவர்கள் பாலியல் தொடர்பான செயலுக்கு திரும்பாமல் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.