districts

img

முறைகேடாக சுங்க கட்டணம் வசூல்

திருவள்ளூர்,டிச.28- நான்கு வழி சாலை திட்டத்தை நிறை வேற்றாமல் முறைகேடாக சுங்க கட்டணம் வசூலிக்கும், திட்ட இயக்குநர் மற்றும் சுங்கவரி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்களின் கூட்ட மைப்பு சார்பில் வியாழனன்று (டிச 28),  சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை தற்போது இரு வழி சாலை யாக உள்ளது, இதனை நான்கு வழி சாலை யாக மாற்றுவதற்கான வரைவு திட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.  இதற்கான ஒப்பந்தம் பெறப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை இத்திட்டம் செயல் வடிவம் பெறாததால் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலை கள் சீர்கேட்டால் விபத்துகளும், உயிரிழப்பு களும் அதிகரித்து  வருகிறது. இந்த நிலையில் நான்கு வழி சாலை திட்டத்தை நிறைவேற்றாமல் சென்னை மாத வரம் முதல் ஆந்திர மாநிலம் தடா வரை உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் முறைகேடாக வசூலிக்கப்படுவதாகவும், இதன் மூலம் ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் சுரண்டப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு  குற்றம்சாட்டியுள்ளது. நான்கு வழி சாலை திட்டத்தை செயல்படுத்தாமலும், தற்போதுள்ள சாலையை முறையாக பராமரிக்காமல் சுங்க கட்டணம் வசூலிக்கும் ஒன்றிய  சுங்க சாவடி களின் திட்ட இயக்குநர் ஜனக்குமார், ஒப்பந்ததாரரான மேலாண்மை இயக்குநர் தீபக் மற்றும் செங்குன்றம் சுங்கச்சாவடி மேலாளர் ஆகிய மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.