districts

img

குவாரிகளில் கூடுதல் பணவசூல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடலூர், அக்.17- கடலூர் கேப்பர் மலையில் குவாரிகளில் கூடுதல் பண வசூல் செய்வதை தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  கடலூர் கேப்பர் மலை பகுதியில் கிராவல் குவாரி மற்றும் சவுடு மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு சட்டத்துக்கு புறம்பாக பொதுமக்களுக்கும் லாரி உரிமையாளர்களுக்கும் பண இழப்பை ஏற்படுத்தும் வகையில் புதுக் கோட்டையைச் சேர்ந்த எஸ்.ஆர் ஒப்பந்த நிறுவனத்தினர் சட்டத்துக்கு விரோதமாக லாரி உரிமையாளர்களிடமும் ஒரு லோடு லாரிக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக நான்காயிரம் முதல் ஐந்தா யிரம் வரை வசூல் செய்கிறார்கள். எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த மனு வில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆய்வு நடத்தி கட்டாயமாக வசூல் செய்யப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே பெறுவதற்கான வழிவகை செய்ய வேண்டும் என வலி யுறுத்தி கடலூர் மாவட்ட டிப்பர் லாரி மற்றும் டாரஸ் உரிமையாளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று கேப்பர்மலையில் குவாரிக்கு  சென்று முற்றுகையிட்டனர்.  பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட டிப்பர் லாரி மற்றும் டாரஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஏ.கே.கே. கருணாநிதி, ஒருங்கிணைப்பாளர் பி.ஓம்பிரகாஷ், செய லாளர் ஆர். ராம்மூர்த்தி, பொருளாளர் ஜி.தர்மராஜ், கௌரவத் தலைவர் ஜே. குமார் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.