கள்ளக்குறிச்சி,செப். 27 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட திருவெண்ணை நல்லூர் சாலையில் உள்ள அண்ணா நகர் முதல் தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த தெருவை ஒரு சில நபர்கள் ஆக்கிரமித்து கடைகளை கட்டிக்கொண்டு ஒரு வழி பாதையாக மாற்றி யுள்ளனர். இதனால் வயதானவர்கள், கர்ப்பிணி, பெண்கள் என யாருமே அவசர தேவைக்கு ஆட்டோ வில் கூட சென்று வர முடியாத நிலை உள்ளது. இந்நிலையில், தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் சென்று வர வசதி செய்து தர வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பொது மக்கள் பயன்படுத்தி வந்த அரசுக்கு சொந்தமான கிணற்றை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர் ஒருவர், சுற்றுச்சுவர் அமைத்து விட்டார். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அந்த கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் வலியுறுத்தி னர். சிபிஎம் மாவட்டச் செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன், எம்.கே .பழனி, மாவட்டக் குழு உறுப்பினர் எம் . ஆறுமுகம், உளுந்தூர் பேட்டை நகர செயலாளர் பி.சேகர், நகர குழு ஷேக் அலாவுதீன் மற்றும் பாதிக்கப்பட்ட நகர மக்கள் உடனிருந்தனர்.