புதுச்சேரி, செப்.19- தமிழ் ஒளியின் பெயரை பள்ளிகளுக்கு சூட்ட வேண்டும் என்று புதுச்சேரி முதல்வரை முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் சு.ராமச்சந்திரன், புதுச்சேரி செயலாளர் எம். கலியமூர்த்தி, நிர்வாகிகள் அன்பழகன், லெனின் பாரதி, ரமேஷ் பைரவி, சஞ்செய், பிரதாப் ஆகியோர் செவ்வாய் கிழமை (செப்.19) சட்டப் பேரவையில் முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்தனர். அப்போது அளித்த கோரிக்கை மனுவில் கூறி யிருப்பதாவது:- தமிழ்நாட்டின் குறிஞ்சிப் பாடி அருகே ஆடுர் கிராமத்தில் பிறந்து, புதுச்சேரி மண்ணில் வாழ்ந்து தமிழ் மொழிக்காக வும், ஒடுக்கப்பட்ட மக்க ளுக்காகவும் உரிமைக் குரல் எழுப்பியவர் கவி ஞர் தமிழ்ஒளி. தமிழ்ஒளி வாழ்ந்த 41 ஆண்டு காலத்தில் (1924-1965) உலக வரலாற்று நிகழ்வு களை எல்லாம் தனது படைப்பு களில் பதிவு செய்தவர். புதுச்சேரி கருவடிக் குப்பம் சாமிப்பிள்ளைத் தோட்டம் பகுதியில் பாவேந்தரின் சீடராய் திகழ்ந்தவர் தமிழ்ஒளி. அரிய இலக்கிய படைப்புகளை தமிழ் கலை, இலக்கிய உலகிற்கு பங்களிப்பு அளித் திருக்கிறார். புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்த கவிஞர்களில் முதன்மையானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். அந்த மகா கவிஞனின் நூற்றாண்டு வருகிற செப்டம்பர் 21 அன்று தொடங்குகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கலை இலக்கிய அமைப்புகள் அரசு சார் நிறுவனங்கள் பல்வேறு விதமான அரிய நிகழ்வுகளை அந்நாளில் நடத்திடவும் திட்ட மிட்டுள்ளனர். நூற்றாண்டு விழாவில் கவிஞர் புகழ் நிலைத்திருக்க தமிழ் ஒளி வாழ்ந்த புதுச் சேரி கருவடிக்குப்பம் பகுதி யில் உள்ள காமராஜர் மணி மண்டபம்- சிவாஜி சிலை அருகில் நிறுவப்பட்டுள்ள பூங்காக்களுக்கு “தமிழ் ஒளி நூற்றாண்டுப் பூங்கா” எனப் பெயரிட வேண்டும். புதுச்சேரி எல்லையில் தொடங்கப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அவ ரது பெயரில் நுழைவாயில் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். கவிஞர் வாழ்ந்த பகுதியில் இயங்கிவரும் கருவடிக்குப்பம், பெத்து செட்டிபேட்டை அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிக்கு “கவிஞர் தமிழ் ஒளி நினைவுப்பள்ளி” என்று பெயர் சூட்ட வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப் பட்டிருந்தது.