கள்ளக்குறிச்சி, பிப்.15 - உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கணையார் திருநாவலூர் கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் மையத்தில் சுமார் 300 டன் (3000 மூட்டைகள்) நெல் தேங்கியுள்ள நிலையில் நேரடி நெல் கொள்முதல் மையத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திரு நாவலூர் பரிக்கல் பெரும்பாக்கம் கணை யார், குமாரமங்கலம், மலையனூர், குண மங்கலம், வெள்ளையூர், சிறுபாக்கம், நொணையவாடி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கணையார் கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் மையம் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரி யாக 50 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை யிலான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் கணையார் நேரடி நெல் கொள்முதல் மையத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 200 டன் நெல் பயிர்களை அங்குள்ள களத்தில் கொட்டி வைத்துள்ளனர். ஆனால் அறுவடை பணிகள் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேலாகியும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்படாததால் கணையார் நெல் கொள்முதல் மையத்தில் சுமார் 200 டன் நெல் பயிர்கள் தேங்கி உள்ளது. களத்தில் கொட்டி வைக்கப்பட்ட நெல் பயிர்களை அங்கிருக்கும் வனப்பகுதியில் இருந்து மயில், காட்டுப்பன்றி, மான் உள்ளிட்ட பல விலங்குகள் நெல் மணிகளை சேதப்படுத்திவிட்டு செல்வதாகவும் பாது காக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அதேபோல் திருநாவலூர் நேரடி நெல் கொள்முதல் மையத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 100 டன் நெல் பயிர்கள் களத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசும் வேளாண்மை துறை யும் உடனடியாக நடவடிக்கை எடுத்து டெல்டா மாவட்டங்களை போல் கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் மையங்களை உடனடியாக திறந்து விவசாயிகள் அறுவடை செய்து வைத்துள்ள நெல் பயிர்களை கொள்முதல் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர். அரசு தரப்பு விளக்கம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் இதுகுறித்து கூறுகையில், மாவட்ட ஆட்சியரிடமிருந்து உத்தரவு வந்துள்ளது. கொள்முதல் மையங்களை திறப்பதற்கான பணிகளை செய்து வருவதாகவும் இன்னும் சில நாட்களில் அவை செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.