கிருஷ்ணகிரி, பிப். 26- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம் சூலமலை பகுதியில் உள்ள தென்னந்தோப்பு களில் இரண்டு தலைமுறைகளாக காவல் காக்கும் பணியை செய்து வரும் ராஜா, சந்திரன், சின்னதுரை, சூர்யா மாரி, மாது, முருகன், ரவி, முனிரத்தினம், முருகன் உள்ளிட்ட 10 இருளர் குடும்பத்தினர் குடிசை மற்றும் கூரை கொட்டகைகளில் வசித்து வரு கின்றனர். இவர்களுக்கு ஆதார், வாக்காளர் அடை யாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த அத்தாட்சியும் கிடையாது. மேலும் சாதி, இருப்பிட சான்றுகள் இவர்களுக்கு வழங்கப் படாததால் அரசின் சலுகைகளும் கிடைப் பதில்லை. மேலும் பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ளவர்கள் கூட தங்களின் அடிப் படை கல்வி முடிக்க முடியாத நிலையில் உள்ளனர். இவர்களுக்கு ஆதார் அட்டை, சாதிச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்றும், இலவச தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும் என்றும் 100 நாள் வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பர்கூர் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் பரி சீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தார். இதில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பி னர் லெனின் முருகன், வட்டச் செயலாளர் டி.சீனிவாசன், வட்டக் குழு உறுப்பினர்கள் எல்லப்பன், பாசில் பாஷா, அன்வர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.