கள்ளக்குறிச்சி, டிச.22- திருநாவலூர் ஒன்றியம் சேந்தமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் அலுவல கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட் டம், மாரனோடை ஆதி திராவிடர் மக்களுக்கு ஒப்படை செய்த இலவச வீட்டு மனைகள் அளந்து, கிராம கணக்கில் பதிவு செய்ய வேண்டும், மீதி உள்ள காலி இடத்தை கிறி ஸ்தவ மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். ராகவன் கால்வாயில் கரையை பலப்படுத்தி முறை யாக தண்ணீர் செல்ல நடவ டிக்கை எடுக்க வேண்டும். மாரனோடை, சின்ன மாரனோடை கிராமங்களில் தனியாக நியாயவிலைக் கடைகள் திறக்க வேண்டும். குடிநீர் வழங்கும் கிணற் றுக்கு மேல் மூடி அமைக்க வேண்டும். சேந்தமங்கலத்தில் இவன் கோயில் எதிரில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கவும், துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும், மைல குப்பம் சுடுகாட்டுப் பாதையை தார்சாலையாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்.தாமோதரன் தலைமை வகித்தார். கிராம மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய் சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சாமிநாதன், ஒன்றிய செயலாளர் ஜெ. ெஜயக்குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.