districts

உறை கிணறுகள் அகழாய்வு நடத்த கோரிக்கை

விழுப்புரம், ஜூலை 22-

     விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள அத்திக்குளம் பகுதியில் மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரும் பணி கிராம பணி யாளர்கள் மூலம் நடை பெற்று வருகிறது.

    அத்திக்குளம் பகுதியில் கிராம பணியின்போது சுடுமண்ணால் செய்யப்பட்ட 10 க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் இருப்பது கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த உறை கிணறுகள் ஆறு, குளம் உள்ள பகுதி களில் நீரை சேமித்து வைத்து அதை தெளிந்த பின் அருந்துவதற்கு சங்க காலத்தில் பயன்படுத்தப் பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

     இந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள உறை கிணறுகள் பத்தடிக்கு ஒன்று அருகருகில் உள்ள தால் மன்னர் காலத்தில் குதி ரைகளுக்கு நீர் அருந்தவும் உறை கிணறுகள் பயன் படுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றன. இது குறித்து வாதானூர் ஊராட்சி மன்றத் தலைவர் இளவரசன் கூறுகையில், “தொல்லியல் துறை அதிகாரிகள் இந்த பகுதியில் அகழாய்வு செய்து எந்த நூற்றாண்டுகளில் இந்த உறை கிணறுகள் பயன் படுத்தியது என்பதை கண்டு பிடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்” என்றார்.