முனைவர் பட்டம் பெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகள் வெள்ளியன்று (ஏப்.8) உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடியை சந்தித்து, தற்காலிக விரிவுரையாளர் பணி வழங்க கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட அமைச்சர், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் தற்காலிக விரிவுரையாளர் பணி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.