districts

img

கோரிக்கை பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி

மின்வாரிய ஊழியர்கள், அலுவலர்கள், பொறியாளர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு கோரிக்கை பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி செவ்வாயன்று (பிப்.8) அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, பொறியாளர் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், துணைப் பொதுச் செயலாளர்கள் பழனிவேல், கே.ரவிச்சந்திரன், துணைத்தலைவர் அறிவழகன், வடக்கு மண்டல செயலாளர் ஆர்.ரவிக்குமார், நிர்வாகிகள் தனலட்சுமி, சாலட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

                          ***
இதேபோன்று கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களிலும் கோரிக்கை பட்டியல் வெளியிடப்பட்டது.