மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் நியாயமான நிவாரணம் வழங்க வலியுறுத்தி குமராட்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தவிச சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன், விதொச மாவட்ட செயலாளர் பிரகாஷ், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.