districts

img

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர்களை தகுந்த பணியில் அமர்த்த கோரிக்கை

சிதம்பரம், டிச. 18- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம், நிதி சிக்கல் காரணமாக தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் ஊழி யர்கள், பேராசிரியர்களை பணி நிரவல் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 177 தொழில்நுட்ப உதவியாளர்கள் தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரி தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்டவைகளுக்கு பணி நிரவல் செய்தனர். ஆனால் இவர்களுக்கு தொழில் நுட்ப உதவியாளர் என்ற பணிக்கு பதிலாக அலுவலக உதவியாளர் என்று பணி இறக்கம் செய்து நியமித்துள்ளனர். மேலும் பணி செய்யும் இடங்களில் அவர்கள் கீழ்தரமாக நடத்துவதாகவும் தொழில்நுட்ப உதவியாளர் தகுதிக்கேற்ற பணி வழங்க வேண்டும் என அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி துணை வேந்தர் கதிரேசனை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் இதுகுறித்து உயர்கல்வி துறைக்கு கடிதம் எழுதுவதாக உறுதி அளித்தார்.