புதுச்சேரி,ஜன.27- நாட்டின் 75 வது குடியரசு தின விழா புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி சதுக்கத்தில் வெள்ளிக் கிழமை (ஜன.26) கோலாகலமாக நடைபெற்றது. புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சிறப்பாக சேவையாற்றிய காவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். விழாவில், ஒன்றிய, மாநில அரசு திட்டங்களை விளக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக மாணவர்களின் வண்ணமிகு கலைநிகழ்ச்சியில் விழா பிற்பகல் 12.30 மணிக்கு முடி வடைந்து. விழாவில் முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன்,தேனீ ஜெயக் குமார்,சாய் ஜே.சரவணன் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கள், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, அரசு செயலர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட பலர் விழாவில் பங்கேற்றனர். ஆளுநர் தாமதத்தால் மாணவர் மயக்கம் குடியரசு தின விழா காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி 11 மணிக்கு முடிப்பது வழக்கம். ஆனால், புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளு நர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநிலத்திற்கு ஆளு நராக உள்ளார். முதலில் மாநில அந்தஸ்துடன் உள்ள தெலுங்கானா வில் கொடி ஏற்றிய பிறகு புதுச்சேரி யில் கொடி ஏற்றும் பழக்கத்தை நடைமுறையாக வைத்துள்ளார். அதன்படி, இரண்டாவது முறை யாக புதுச்சேரியில் கால தாமதத் துடன் தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரியில் காலை 10.15 மணிக்கு தேசிய கொடி துணைநிலை ஆளுநர் ஏற்றுவார் என்று அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாகவே மாணவர்களை அழைத்து வந்து பல மணி நேரம் காக்க வைத்தார். இதனால் ஒரு சில ர் மயக்கமடைந்தார். கடற்கரை யோரம் வெயில் சுட்டெரித்ததால் சில மாணவர்கள் விழாவில் பங்கேற்பது சிரமமாக இருந்தது. அதேப்போல் விடுதலை போராட்ட வீரர்கள் அவர்கள் வாரிசு களும் விழாவில் முழுமையாக பங்கேற்க முடியாமல் பாதியி லேயே சென்றனர். எனவே, விழாவை காலை 11 மணிக்கு முடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தேநீர் விருந்து: சுயேட்சை எம்எல்ஏவும் புறக்கணிப்பு இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்து நிகழ்ச்சி அன்றைய தினம் மதியம் 1 மணிக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கனவே எதிர் கட்சியான திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இதை புறக்கணித்தன. சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு (எ) குப்புசாமியும் இந்த விருந்தை புறக்கணித்து குடியரசு தினவிழாவில் மாணவர்கள் மயங்கி விழுந்தது மற்றும் விழா தாமதமாக நடைபெற்றது குறித்து தனது கண்ட னத்தை பதிவு செய்தார். விழாவில் பங்கேற்க மாணவர் கள் அதிகாலை 4 மணிக்கே அழைத்துவரப்பட்டு மைதானத்தில் பலமணிநேரம் உட்கார வைக்கப் பட்டிருந்ததால் வெயில் தாங்காமல் மயங்கி விழுந்தனர் என்று அவர் அதில் கூறியிருந்தார்.