districts

img

பாலியல் சீண்டல் குறித்து உடனே புகார் அளிக்க பேருந்துகளில் அவசர பட்டன்

சென்னை, டிச.29- சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பாலியல் சீண்டல் உள்ளிட்ட பிரச்சனைகளை பெண்கள் சந்திக்கநேர்ந்தால் அதுகுறித்து தகவல் தெரிவிக்க அவசர பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை நகரில் இயக்கப்படும் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் எப்போது வரும் என்பதை அறிய ‘சலோ’ செயலி பயன் பாட்டில் உள்ளது. இந்த நிலையில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்காக தற்போது சிறப்பு வசதிகள் செய்யப் பட்டுள்ளன. இதற்காக சென்னையில் இயங்கும் சுமார் 1200 மாநகர பேருந்துகளில் அவசர  பட்டன் பொருத்தப்  பட்டுள்ளன. பஸ்களில் பய ணம் செய்யும் ஆண்கள் தங்களை உரசினாலொ, பாலியல் தொல்லை கொடுத்தாலொ இந்த அவசர பட்டனை அழுத்த லாம். அதன் மூலம் அந்த நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.   பொது இடங்களிலும், பேருந்துகளிலும் மக ளிர் பயணிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் வகையில் சென்னை மாநக ராட்சியுடன், மாநகர போக்கு வரத்து கழகமும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்து கின்றன. இந்த விழிப்பு ணர்வு பிரசாரம் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், பிராட்வே, திருவான்மியூர், கிண்டி ஆகிய மாநகர போக்குவரத்து கழக டெப்போக்களில் நடந்தது. இந்த விழிப்புணர்வு பிர சாரத்தின் மூலம் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பெண்கள் அவசர பட்டன்களை எப்படி பயன்படுத்துவது, அரசு உதவி எண்களை எப்படி கையாள்வது என்பது பற்றி பெண்களுக்கு விளக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்துக்காக இந்த டெப்போக்களில் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் அவசர பட்டனின் அமைப்பு, அவை எவ்வாறு செயல்படு கிறது என்பது பற்றி காண்பிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிர சாரத்தின் போது தெரு நாடகமும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமையும் (30-ந்தேதி) இந்த விழிப்பு ணர்வு பிரச்சாரம் நடைபெற வுள்ளது.