மகாத்மா காந்தியின் நினைவு தினமான செவ்வாயன்று (ஜன.30) தரமணியில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில பொதுச்செயலாளர் எம். ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் க. பீம்ராவ், துணைத் தலைவர் ஜமீலா, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் கே. வனஜகுமாரி, எஸ். முகமது ரஃபி உள்ளிட்டோர் பேசினர்.