புயல்மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராமதாஸ் நகர், போஜராஜ நகர், 48வது வார்டு மக்களுக்கு அமைப்பு சாரா சங்கம் ராயபுரம் பகுதிக்குழு சார்பில் போர்வை, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் டி.வெங்கட், பொருளாளர் ஏ.குணசேகரன், நிர்வாகிகள் ஜி.முனுசாமி, எம்.ஜாவித், கவுஸ், குமார், நாகஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.