districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம்

கள்ளக்குறிச்சி, ஏப்.30 - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களுக்கு  சீரான குடிநீர் விநியோகம் கிடைத்திட மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  கோடை காலத்தில் மக்களுக்கு சீரான  குடிநீர் விநியோகம் வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலை மையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அலுவலர்கள், நகராட்சி,பேரூராட்சி, ஊரக வளர்ச்சித் துறை,வட்டாட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர்மாவட்டத்தில் நடந்து வரும் குடிநீர் திட்டப்பணிகள் முடிவுற்ற பணிகள் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களை கண்டறிந்து பணிகள் நடந்து வரும் இடங்களை ஆய்வு போர்க்கால  அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிநீர் தேவை குறித்து மக்களின் கோரிக்கைகளை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊரக நகர்ப்புற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள இடங்களை கண்டறிந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்,கிணறுகள் ஆழ்துளை கிணறு ஆகியவை வறண்டு போவதை முன்கூட்டியே கண்டறிந்து அப்பகுதிக்கு குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் இணைந்து முறையற்ற வகையில் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படும் பகுதிகளை கண்டறிந்து மின் மோட்டார்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அனு மதியின்றி குடிநீர் இணைப்பு எடுத்து பயன்படுத்துபவரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, வேண்டும் கோடை  காலம் என்பதால் குடிநீர் வழங்கும் மின்மோட்டார்கள் முறையாக பராமரிக்கப் பட வேண்டும், ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் தேவை அதிகம் உள்ளதாக கருதப்படும் பகுதிகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் வழங்க ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.