districts

img

கரடிக்கல் கிராம தலித் மக்கள் மீது தொடரும் தீண்டாமை கொடுமை

கிருஷ்ணகிரி,செப்.11-  அஞ்செட்டி வட்டம், கரடிக்கல் கிராம தலித் மக்கள் மீது தொடரும் தீண்டாமை கொடுமைகளை கண்டித்தும் ஆக்கிரமிக்கப்பட்ட அவர்க ளது நிலங்கள் மற்றும் உரிமைகளை மீட்க போராட்டம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி யிலிருந்து மலைப்பகுதிகளுக்குள் 10 கிமீ தூரத்தில் மாடக்கல் ஊராட்சியில் கரடிக்கல் கிராமம் உள்ளது. இங்கு 45 தலித் குடும்பங்கள் 30 சிறு வீடு களில் வசித்து வருகின்றனர். சொந்த  நிலம்,வீடு,வருமானம் இல்லாததால் சில வீடுகளில் இரண்டு தலைமுறை  குடும்பத்தினர் வசிக்கின்றனர்.  கவுடா  சமூகத்தினர் 35 குடும்பத்தினரும், குறும்பர் 40 குடும்பத்தினரும், இருளர் 70 குடும்பத்தினரும் இங்குள்ளனர்  கடந்த சில நாட்களாக தலித் மக்கள்  மீது உயர் சமூகத்தைச் சேர்ந்த பலர் தீண்டாமை கொடுமைகளை செய்தும், இருக்கும் சிறிய பகுதி நிலத்தையும் தலித் மக்களிடம் இருந்து அபகரிக்க பல்வேறு நெருக்கடிகளை அளித்து வருகின்றனர்.  இத்தகவல்கள் அறிந்து  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சி அஞ்செட்டி  வட்ட செயலாளர் தேவராஜன்  தலைமை யிலான குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர். தலித் மக்களில் சிலருக்கு மட்டுமே  தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வரும் நிலம் உள்ளது. பெரும்பாலான குடும்பத்தினர் நிலமற்றவர்கள் என்பதால் ஆடு, மாடுகள் மேய்த்தும் எப்போதாவது கிடைக்கும் கூலி வேலை செய்தும் குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.  தலித் மக்கள் வசிக்கும் தெருவுக்கு  சாலை,தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரப்படவில்லை, தெருவின் நடு விலேயே சாக்கடை ஓடிக் கொண்டி ருக்கிறது. குடிநீருக்கு குழாய்கள் போடப்பட்டும் தலித் மக்களின்  தெருவுக்கு தண்ணீர் விடப்படாததால் பொதுக்குழாயில் பிற சமூகத்தினர் தண்ணீர் பிடித்துச் சென்ற பின்  வெகு நேரம் காத்திருந்து பிடித்துச்செல்ல வேண்டியுள்ளது.

விவசாயம் செய்வதற்கும் கால் நடைகளை மேய்ப்பதற்கும் தலித்  மக்களுக்கு வழி விடாமல் தடுக்கப்படு கின்றனர். இதனால் கூலி வேலையும்,  மேய்ச்சல் வேலையும் பாதிக்கப்படு வதால் பல குடும்பத்தினர் என்ன செய் வது என்று தெரியாமல் கால்நடைகளை விற்று வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.  ஊரின் மையப் பகுதியில் உள்ள 76 சென்ட் நிலத்தை பல தலை முறைகளாக மாட்டு சாணம் கொட்டி  வைக்கவும், கால்நடைகள் கட்டி வைக்க வும் அவற்றுக்கு தீவனத்திற்கு போர் வைக்கவும் தலித் குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில்  மளிகை கடை நடத்தி  வரும் குமரேசன் என்பவர், தலித் மக்கள் பயன்படுத்தி வந்த அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில் கார்  மற்றும் இருசக்கர வாகன நிறுத்து மிடமாக மாற்றியுள்ளார். தலித் மக்கள்  பல தலைமுறைகளாக பயன்படுத்தி வரும் நிலத்தை ஆக்கிரமிப்பது முறையற்ற செயல் என்றும் அதனை  கைவிட வேண்டும் என்றும் கும ரேசனிடம் பலமுறை வலியுறுத்தி யும் கேட்காததால் இது குறித்து மாவட்ட ஆட்சியர், ஓசூர் சாராட்சியர், வட்டாட்சியரிடம் தலித் மக்கள் புகார் அளித்தனர்.   அரசு அதிகாரிகள் இதுகுறித்து குமரேசனிடம் நேரில் விசாரித்தனர். அதனால் கோபமடைந்த குமரேசன், பிற சமூகத்தை சேந்த சிலரை  தூண்டிவிட்டு கீழ் சாதியை சேர்ந்த வர்கள் ஊரின் மையப் பகுதியில் உள்ள இடத்தை பயன்படுத்துவதை நாம்  அனுமதிக்க முடியாது என பிரச்சனை களை கிளப்பியுள்ளார்.  அதன் தொடர்ச்சியாக குமரேசன் உட்பட பிற  சமூகத்தை சேர்ந்தவர்கள் தலித் மக்கள் மீது தொடர்ச்சியாக மிரட்டல்  விடுத்து வந்தனர். மீண்டும் இது குறித்து  அரசு அதிகாரிகளிடம் தலித் மக்கள் புகார் அளித்தனர். உடனே  காவல் துறையினருடன் அங்கு வந்த வட்டாட்சியரி டம் பிற சமூகத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அதிகாரியின் விநோத நடவடிக்கை 

தலித் மக்களோ தங்களது நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். ஆனால் வட்டாட்சியர் நிலத்தை மீட்டு தலித் மக்களிடம தருவதற்கு மாறாக இது அரசு நிலம், இதை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்து வேலி அமைத்து அறிவிப்பு பலகையை வைத்ததுடன் அங்கிருந்த அம்பேத்கர் படத்தையும் அகற்றி தலித் மக்களை வலுக்காட்டாயமாக வெளியேற்றியுள்ளார். பாதிக்கப்பட்ட அம்மக்கள் நியாயம் கேட்டு முழக்க மிட்டபோது மாற்று இடம் தருவதாக பெயரளவுக்கு கூறி விட்டு சென்றார். மாளிகை பொருள் தர மறுப்பு  இதன் தொடர்ச்சியாக இங்குள்ள மளிகை கடைகளில் தலித் மக்களுக்கு  மளிகை சாமான்கள் கொடுக்கக் கூடாது,  அவர்களிடம் பேசக் கூடாது, கட்டுப் பாட்டை மீறுபவர்களுக்கு ரூ 1001  அபராதம் விதிக்கப்படும் என குமரே சன் தூண்டுதலில் பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளனர்.  தலித் மக்கள் மளிகை கடைகளுக்கு சென்று பொருள்கள் கேட்டால்  உங்களுக்கு எந்த பொருளும் தர முடியாது ஊர் கட்டுப்பாடு என கடைக்காரர்கள் மறுத்து வரு கின்றனர். 

தண்ணீர் பிடிக்கவிடாமல் தடுப்பு 

பொது குழாய்களில் தலித் மக்கள் தண்ணீர் பிடிப்பதை தடுக்கும் விதமாக பொது குழாய்கள் அடியில் பிற சமூகத்தினரின் காலி குடங்கள் பாத்திரங்களை எப்போதும்  வைத்து விடுகின்றனர்.இதனால் அந்த பாத்திரங்களை அகற்றி தண்ணீர் பிடிக்க முடியாமல் தலித் மக்கள் தவித்து வருகின்றனர். 

கோவில் விழாக்களிலும் புறக்கணிப்பு 

 மாரியம்மன் கோவில், பாலகொண்டராய சுவாமி கோவில், மல்லேஸ்வர சுவாமி கோவில், பசுவேஸ்வரா சுவாமி கோவில், ஆஞ்ச நேயர் கோவில்களுக்கு திருவிழா, பொது வரி கால காலமாக தலித் மக்களிடம் வசூலித்து வருகின்றனர்.  ஆனால் அவர்களை கோயிலுக்கு உள்ளே சென்று வழிபடுவதற்கு அனு மதிப்பதில்லை. தலித் மக்கள் கால்நடை களை காடுகளுக்கு ஓட்டி சென்று மேய்ப்பதற்கு வழி விடாமல் இது மேல்  சாதியினர் செல்லும் பாதை என தடுத்து   வழிகளை அடைத்துள்ளனர். இதனால்  கால்நடைகள் மேய்க்கும் தொழிலை யும் செய்ய முடியாது என்ற அச்சத்து டன் பலர் கால்நடைகளை விற்று வருகின்றனர்.  சுகாதார கழிப்பிட வசதி இங்கு இல்லாததால் மக்கள் திறந்த வெளிகளையும் குட்டையையும் பயன்படுத்தி வந்தனர். தற்போது அதற்கான வழிகளையும் அடைத்ததோடு இந்த குட்டை எங்களுக்குதான் சொந்தம் நீங்கள் இந்தக் குட்டையை பயன்படுத் தக் கூடாது என்று தலித் மக்களை மிரட்டி தடுத்து வருகின்றனர். இதனால் குறிப்பாக தலித்பெண்கள் காலை கடன்களை கூட முடிக்க கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  இங்கு தலித் மக்களுக்கு அரசு கட்டித் தந்த 13 தொகுப்பு வீடுகள் சிதில மடைந்து மேற்கூரைகள் சிமெண்ட்  பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் தொங்கிக்  கொண்டிருக்கின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும்  நிலையில் உள்ளது. இதுகுறித்து பலமுறை அரசு உயர் அதிகாரிகள் அனைவரிடமும் மனுக்கள் கொடுத்தும் இதுவரை தொகுப்பு வீடுகளை சீர்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.  இந்நிலையில் கரடிக்கல் தலித்  மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி நிர்வாகி கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.   அரசு நிர்வாகம் இனியும் இப்பிரச்சனை களை இழுத்தடிக்கும் நிலை ஏற்பட்டால் தலித் மக்களின் உரிமை களை மீட்டிட  அப்பகுதியில் போராட்டம் நடத்த தயாராக இருப்ப தாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சி அஞ்செட்டிவட்ட குழு  செயலாளர் தேவராஜ் ஆகியோர் எச்சரித்துள்ளனர். ஒய்.சந்திரன்