மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் சிவப்பு புத்தக தினத்தை முன்னிட்டு மதத்தைப் பற்றி மார்க்ஸ் - ஏங்கெல்ஸ் எழுதிய புத்தகம் வாசிக்கப்பட்டது. மூத்த தலைவர் வே.மீனாட்சி சுந்தரம், மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் வெ.ராஜசேகரன், இரா.சுதிர் எழுத்தாளர் வீ.பா.கணேசன் அலுவலகக் கிளை, விசேச கிளை மற்றும் சமூக வலைத்தள கிளைத் தோழர்கள் இதில் பங்கேற்றனர்.