ஆவடி காவல் ஆணையரகத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு
அம்பத்தூர், நவ. 7- ஆவடி காவல் ஆணை யரகத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 14ஆம் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவடி காவல் ஆணை யரக எல்லைக்குள் உள்ள காவல் நிலையங்களில் காவலர்களுடன் சேர்ந்து பணியாற்ற ஊர்க்காவல் படையில் ஆட்கள் சேர்ப்பு நடைபெற உள்ளது. இதற்கு ஆண்கள் 50 பேரும், பெண் கள் 2 பேரும், கடலோர காவல்படையில் ஊர்க் காவல் படையில் சேர்ந்து பணியாற்ற நீச்சல் தெரிந்த 2 ஆண்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிப்ப வர்கள் ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குள் வசிப்பவராகவும், 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 50 வயதிற்கு உட்பட்டவராக வும் இருக்க வேண்டும். குற்றப்பின்னணி இல்லாத வராகவும், நன்னடத்தை உள்ளவராகவும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை வைத்திருப்பவராக இருக்க வேண்டும். ஊர்க்காவல் பணிக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 14ஆம் தேதி கடைசி நாள். ஆவடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவல கத்தில் அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் விண்ணப் பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எண்ணூர், மணலியில் ரவுடிகளின் வீடுகளில் போலீஸ் சோதனை
சென்னை, நவ. 7- எண்ணூர், மணலி, செங்குன்றம் ஆகிய பகுதி களில் உள்ள 20 ரவுடிகளின் வீடுகளில் காவல்துறை யினர் நள்ளிரவு சோதனை நடத்தினர். ஆவடி காவல் ஆணை யர் கி.சங்கர் உத்தரவின் பேரில் காவல் துறையினர் எண்ணூர், மணலி, செங்குன்றம் ஆகிய பகுதி களில் வசிக்கும் ஏ பிளஸ் ரவுடிகள் சுருட்டை வெங்க டேசன், குள்ள கார்த்திக், பாம்பு நாகராஜ் மற்றும் ஏ பிரிவைச் சேர்ந்த ரவுடிகள் பாம் நாகராஜ், அருண், இளம் தமிழன், தினேஷ் ஆகிய ரவுடிகளின் வீடு களில் திங்களன்று நள்ளிரவு சோதனை நடத்தினர். அப்போது அங்கு குற்றவாளிகள் பதுங்கி உள்ளனரா, ஆயுதங்கள் ஏதாவது உள்ளதா என சோதனை நடத்தினர். சோதனையில் எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. மேலும் ரவுடிகளின் குடும்பத்தாரிடம் ரவுடித் தனத்தை ஒழிக்க வேண்டி யதன் அவசியத்தையும், அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். மொத்தம் 20 வீடுகளில் இந்த சோதனை நடைபெற்றது.
இன்று இஎஸ்ஐசி குறை தீர்ப்பு முகாம்
சென்னை, நவ.7- சென்னை மண்டல குறை தீர்க்கும் முகாமை தொழில் முனைவோர், காப்பீட்டாளர் போன்ற இஎஸ்ஐ பயனாளி களுக்காக புதனன்று பிற்பகல் 2.30 மணியள வில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் மண்டல அலுவலகத்தில் (ஸ்டெர்லிங் ரோடு) நடத்துகிறது. எனவே அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத் திக் கொண்டு தங்களின் குறைகளுக்கான தீர்வை பெற்றுக் கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
20 பேர் மீது குண்டர் சட்டம்
சென்னை,நவ.7- பொதுமக்களின் பணத்தை கோடிக்கணக்கில் மோசடி செய்த பொருளாதார குற்றப்பிரிவு வழக்குகளில் சிக்கிய நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எட்டுக்கும் மேற்பட்ட பொருளா தார குற்றப்பிரிவு வழக்குகளில் சுமார் 20 பேர் குண்டர் சட்டம் போடும் வகையில் பட்டியல் தயாராக உள்ளது.பொது மக்களை திட்டமிட்டு பணத்தை ஏமாற்றும் பொருளாதார குற்றப்பிரிவு குற்றவாளிகள் கடும் சட்டத்தில் தண்டிக்கப் படுவது மூலம் குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு வெடி குண்டு: ரவுடி கைது
சென்னை, நவ. 7- சென்னை வில்லிவாக்கம் அண்ணா சத்யாநகர் பகுதியில் மது போதையில் கணவர் அடிப்பதாக பெண் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து வில்லிவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணை தாக்கிய வாலிபர் வீட்டில் டிபன் பாக்ஸ்களை அடுக்கி வைத்திருந்தார். அப்போது அந்த வாலிபர் டிபன் பாக்சுக்குள் குண்டுகள் உள்ளது. திறந்தால் வெடித்துவிடும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் பின் வாங்கினர். அதற்குள் வாலிபர் தப்பி ஓடி தலை மறைவாகி விட்டார். இதையடுத்து போலீசார் அவரை தேடி கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் கார்த்திக் என்பதும் ராணிப்பேட்டையை சேர்ந்த ரவுடி என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து வெடி குண்டு நிபுணர்களின் உதவியுடன் போலீசார் டிபன் பாக்சை திறந்து பார்த்தனர். அப்போது 2 நாட்டு வெடி குண்டுகள் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். ராணிப்பேட்டையில் இருந்து தனது எதிரிகளுக்கு பயந்து ரவுடி கார்த்திக் வில்லிவாக்கத்தில் வந்து குடியேறியதாக தெரிவித்தார். ரவுடிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கருதி வெளியில் செல்லும்போது டிபன்பாக்ஸ் குண்டுகளோடு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
ஆள்மாறாட்டம் செய்து நிலம் விற்றவர் கைது
அம்பத்தூர், நவ, 7- சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சாய் நிவாஸ் 7ஆவது பிர தான சாலையில் வசிப்பவர் ஸ்ரீஹரி (46). இவருடைய மனைவி மற்றும் பிரகாஷ், ஸ்ரீலதா மகாலட்சுமி, லதா பாலாஜி, ரச்சிதமனதா ஆகிய 5 பேரும் சேர்ந்து 2006ஆம் ஆண்டு செங்குன் றம் அடுத்த பாடியநல்லூரில் 97 சென்ட் நிலத்தை கிரையத்திற்கு வாங்கி, செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தனர். இந்நிலையில் சோழ வரம் அடுத்த சிறுணியம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த நிலத்தரகர் கார்த்திக் (32) என்பவர் மேற்படி நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து ராம நாதன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதுபற்றி தகவலறிந்த நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆவடி காவல் ஆணையர் கி.சங் கரிடம் புகார் அளித்தனர். புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நிலத் தரகர் கார்த்திக்கை கைது செய்தனர்.
சீட்டு நடத்தி பணம் மோசடி: கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் புகார்
கிருஷ்ணகிரி,நவ.7- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், புதூர் புங்கனை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த உமா அவரது கணவர் ராமமூர்த்தி இருவரும் 2015 முதல் சீட்டு நடத்தி வருகின்றனர். 30 க்கும் மேற்பட்டோர் ரூ.1 லட்சம் முதல் 3 லட்சம் வரைக்கும் சீட்டுக்கு பணம் கட்டியுள்ளனர். சீட்டு முடிந்ததும் பணம் கட்டியவர்களுக்கு மொத்த பணமும் கொடுக்காமல் ஆரம்ப காலத்தில் இருந்து ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதுகுறித்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இந்த நிலையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் ராஜேஸ்வரி, தினமணி, சேகர், சித்ரா, தவமணி, மொலுகு ஆகியோர் கூறுகையில்,“ சீட்டு பணம் கொடுக்காமல் 2018 முதல் 4 ஆண்டுகளாக தொடர்ந்து ஏமாற்றி வரும் உமா, ராமமூர்த்தி ஆகியோர் மீது 5 முறை ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முறையான பதிலும் கூறவில்லை”என்றனர். நாங்கள் சிறுக சிறுக சேமித்து சீட்டு கட்டி வந்தோம். ஒவ்வொருவருக்கும் ரூ. 1 லட்சத்துக்கும் அதிகமாக பணம் தர வேண்டும். மூன்று ஆண்டுகள் கடந்தும் கொடுக்கவில்லை. கேட்டால் உயிரோடு இருக்க முடியாது என்று மிரட்டுகின்றனர். ஆகவே மாவட்ட ஆட்சியர், தலையிட்டு பணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இருளர் இன மக்களுக்கு வீடு வழங்க கோரிக்கை
திருவண்ணாமலை,செப்.7- திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த இருளர் இன மக்கள் போதிய வருமானம் இன்றி வறுமையில் வசித்து வந்தனர். இந்த நிலையில், பானுப்பிரியா, செல்வம், சுமதி, பச்சையப்பன் உள்ளிட்ட ஏழு பேர் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக அமர்த்தி வேலை வாங்கப்பட்டனர். கடந்த 2021 ஆம் ஆண்டில், அரசு அலுவலர்கள் மீட்கப்பட்டனர். ஆனால் வருமானத்திற்கு வேறு வேலை இல்லாமல், குடியிருக்க வீடு இல்லாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எனவே, தங்களுக்கு தமிழ்நாடு அரசு வீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
மழைக்கால நிவாரணம் உயர்வு
புதுச்சேரி, நவ. 7- புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மழைக் கால நிவாரணம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 18,504 மீனவ குடும்பங்கள் பயன்பெறும். இதற்கான உத்தரவை முதல்வர் ரங்கசாமி செவ்வாய்க்கிழமை (நவ.7) சட்டப்பேரவையில் மீனவப் பிரதிநிதிகளிடம் வழங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் உடனிருந்தார்.
காவல்துறையின் அலட்சியத்தால் நடந்த கொலை: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்
கடலூர், நவ.7- காவல்துறை அலட்சியத்தால் நடந்த கொலைக்கு காரணமான நெய்வேலி தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் தற்காலிக பணி நீக்கம் செய்து விழுப்புரம் டிஐஜி உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் நெய்வேலியில் பிரியாணி கடை நடத்தி வரும் கண்ணன் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த மாதம் கண்ணன் கடைக்கு வந்த இரண்டு பேர் ஓசியில் பிரியாணி கேட்டு தகராறில் ஈடுபட்ட னர். மேலும் இவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து தெர்மல் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் அளித்தார். ஆனால் இந்த புகார் மீது காவல்துறை யினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், மீண்டும் அந்த கடைக்குள் புகுந்த அந்த நபர்கள் கண்ணனை கொலை வெறியுடன் கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் படு காயமடைந்தார். சிசிடிவியில் பதிவான அந்த காட்சி கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதன் பின்னர்தான் அராஜகத்தில் ஈடுபட்ட விக்கி மற்றும் எழில் நிலவன் என்கிற இரண்டு பேரை யும் கைது செய்த காவல்துறையினர் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கண்ணன் பிரியாணி கடையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறையில் இருக்கும் விக்கி என்பவர் கூலிப்படை மூலம் இந்த கொலையை அரங்கேறியது தெரியவந்தது. இதையடுத்து, கூலிப்படையினரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் விரிவான விசாரணைக்கு விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தனிப்பிரிவு காவலர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். கண்ணன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுத்திருந்தால் கண்ணன் படுகொலை சம்பவம் தடுக்கப்பட்டு இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கண்ணன் உயிருக்கு ஆபத்து இருப்ப தாக குற்ற செயல்களை கட்டுப்படுத்த நுண்ணறிவு புலனாய்வு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்து அதன் மீது தெர்மல் காவலர்கள் அலட்சி யம் காட்டியதால் தான் இந்த கொலை நடந்துள்ளது என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, தெர்மல் காவல் நிலைய ஆய்வாளர் லதாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.