கடலூர், நவ.15- செம்மண்டலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கொள்முதல் பணிக்காக ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடலூர் செம்மண்ட லத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 2022 - 2023ஆம் ஆண்டுக்கு கொள்முதல் பணிக்காக பரு வகால பட்டியல் எழுத்தர், உதவியாளர் மற்றும் காவலர்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யும் பணி நவம்பர் 14ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நுகர் பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் ஏராளமான ஆண்கள், பெண்கள் நேர் முகத் தேர்விற்கு குவிந்த னர். இவர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தி அதனடிப் படையில் ஆட்களை தேர்வு செய்கின்றனர். பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு 110 பேர் தேர்வு செய்ய உள்ள நிலையில் 2,130 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் உதவியா ளர் பணிக்கு 117 பேர் தேர்வு செய்யப்பட உள்ள நிலை யில் 3,652 பேர் விண்ணப் பித்துள்ளனர். காவலர் பணிக்கு 146 பேர் தேர்வு செய்யப்பட உள்ள நிலை யில் 1,603 பேர் விண்ணப் பித்துள்ளனர். மொத்தம் 7,385 பேர் விண்ணப்பித் துள்ளனர்.