districts

அறநிலையத் துறைக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்பு

ராயபுரம், ஆக.24-

     சென்னை ராயபுரத்தில் இந்து அறநிலைய துறைக்கு  சொந்தமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்த மான 1200 சதுர அடி பரப்ப ளவு உள்ள இடத்தை தனியார் நபர் ஆக்கிரமித்து முதல் தளத்தோடு 9 கடை கள் மற்றும் 3 வீடுகள் இருந்தன. இதில் நீண்ட கால மாக அங்கு வசித்து வரும் சங்கர் என்பவர் பராமரிப்பில் அறநிலையத்துறை ஒப்படைத்ததாகவும் கீழ் தளத்தில் உள்ள கடை களுக்கு வரும் வாடகை மட்டும் அவர் எடுத்து கொள் ளலாம் என்றும் அறநிலை யத்துறை சார்பில் தெரி விக்கப்பட்டதாக கூறப்படு கிறது. இந்நிலையில் தரை தளம் மட்டும் அல்லாமல் மேல் தளத்திலும் சங்கர் வசிக்கும் 3 வீடுகள் உட்பட 9 கடைகளையும் அதற்கான வாடகையையும் 25 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தமாக குத்தகைக்கு விட்டு அவர் அனுபவித்து வந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அன்று இந்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அறநிலைய துறையிடம் ஒப்படைக்க வேண்டு மென்று கூடுதல் நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி புதனன்று அறநிலைய துறை அதிகாரிகள் ரூ.1.5 கோடி சொத்துக்களை மீட்டு அங்கு குடியிருந்தவர்களை வெளியேற்றினர். இதைத்தொடர்ந்து வீடு, கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.