12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு திங்களன்று (பிப். 12) தொடங்கியது. சென்னை மந்தைவெளியில் உள்ள புனித அந்தோணியார் பெண்கள் பள்ளியில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்வுக்கான ஆய்வகங்களை பார்வையிட்டு மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.