மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், பெரும்பாக்கம் கிராமத்தில் கிளைச் செயலாளர் தனசேகர் தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் அர்ஜூன்குமார் உள்ளிட்ட பல கலந்து கொண்டனர்.