districts

img

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் ரவிக்குமார் மாபெரும் வெற்றியை ஈட்டுவார்

விழுப்புரம், மார்ச்.25- விழுப்புரம் மக்கள வைத் தொகுதியில் இந்தியா  கூட்டணி வேட்பாளர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அமைச்சர் பொன்முடி  தெரிவித்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேட்பு மனு தாக்கல்  அலுவலகத்தில் திங்கள் கிழமை இந்தியா கூட்டணி யின் சார்பாக விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் மாவட்ட தேர்தல் அலுவ லர் பழனியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் பொன்முடி சிபிஎம் கட்சி யின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, விசிக பொதுச்செயலாளர்  சிந்த னைச்செல்வன் எம்எல்ஏ, காங்கிரஸ் குலாம் மொய் தின் ஆகியோர் உடன் இருந் தனர். இதன் பின்னர்  செய்தி யாளர்களிடம் பேசிய  அமைச்சர் க. பொன்முடி  இந்தியா கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் விசிக  வேட்பாளர் ரவிக்கு மாரை பானை சின்னத்தில் ஆதரித்து தமிழக முதல் வர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகி யோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.  இதனால் விழுப்புரம் மக்களவைத் தொகுதியில்‌ மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி பெறுவது உறுதி என்று அவர் கூறினார்.