districts

பாலியல் பலாத்காரம்: 4 பேர் கைது

 காஞ்சிபுரம், செப். 10- காஞ்சிபுரத்தில் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட ஜவகர்லால் நேரு தெருவை சேர்ந்த பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாக  கூறியுள்ளார் தொழிலதிபர் குணசீலன். பின்னர் நாளடைவில் அந்த பெண்ணிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். இதனிடையே, மேல்கதீர்பூரில் உள்ள தனது பூர்வீக  சொத்துக்களை காண்பிப்பதாக கூறி, அந்த பெண்ணை தனது காரில் அழைத்து சென்ற குணசீலன், குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து அந்த பெண்ணுக்கு கொடுத்துள்ளார். பின்னர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் கூடவே, 5 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனயில் அனுமதித்தனர். அவர் அளித்த தகவலின் பேரில், தொழிலதிபர் குணசீலன், வழக்கறிஞர்கள் ஜெபநேசன் , குணசேகரன், அஜித் ஆகிய 4 பேரை காவல் துறையின கைது செய்து, 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள காமராஜர் என்பவரை தேடி வருகின்றனர்.

;