districts

img

ராம்குமார் தற்கொலை: உண்மையை கண்டறிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை,அக்.31- சென்னையை சேர்ந்த கணினிபொறியியல் வல்லுனராக பணியாற்றிய வர் சுவாதி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ராம்குமார் என்பவரால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சி புரத்தை சேர்ந்த பரமசிவம் மகன் ராம்குமரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிறையில் இருந்த ராம்குமார் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறையினரால் தெரி விக்கப்பட்டது. இதையடுத்து சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் தற்கொலை வழக்கு முடிவுக்கு வந்தது. ஆனால், ராம்குமார் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் குற்றம் சாட்டினர்.  

இதுகுறித்து ராம்குமாரின் தந்தை பரமசிவம் மனித உரிமை ஆணைய புலனாய்வு பிரிவில் புகார் மனு கொடுத்தார். சுவாதி கொலை வழக்கில் தனது மகனுக்கு தொடர்பு இல்லை. எனவும் வேண்டுமென்றே ராம்குமாரை கொலை வழக்கில் சிக்க வைத்து கொலை செய்து விட்டனர். எனவே ராம்குமார் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என பெற்றோர் வழக்குத்தொடுத்தனர். மீனாட்சிபுரத்தில் உள்ள வீட்டில் ராம்குமாரை காவல்துறையினர் கைது செய்தபோது, அவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறையினர் கூறினர். அதேபோல், ராம்குமார் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் காவலர்கள் தெரிவித்தனர். ஆனால் அவரது பெற்றோர்கள் இதனை மறுத்துள்ளனர். சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மனித உரிமை ஆணையம் முடிவு செய்தது.  இந்நிலையில், சுவாதி கொலை வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் விவகாரம் தற்கொலையா? இல்லையா? என கண்டறிய சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தர விட்டுள்ளது.  மேலும், சிறையில் உயிரிழந்த ராம்குமார் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. சிறையில் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த போதுமான அதிகாரிகளை பணியமர்த்தவும் மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

;