சர்வதேச மகளிர் தினமான புதனன்று (மார்ச் 9) எம்ஜிஆர் நகரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநிலப் பொருளாளர் வ.பிரமிளா, மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் தீ.விஜயகுமாரி, மற்றும் டி.சாந்தி, எஸ்.விஜயா (சிஐடியு), க.மலர்விழி, ரத்திகா, எஸ்தர் ராணி (தமுஎகச), எம்.சரஸ்வதி எம்.சி., எம்.குமார் (மாற்றுத்திறனாளிகள் சங்கம்), நிவேதா (வாலிபர் சங்கம்), ப.க.புகழ்ச்செல்வி (மாணவர் சங்கம்) உள்ளிடோர் பேசினர்.