பெண்கள் விரோத ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக அக்.5 அன்று டெல்லியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பேரணி நடைபெறுகிறது. இதனையொட்டி மத்தியசென்னை மாவட்டத்தில் செப்.11-14 தேதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சார நிறைவு கூட்டம் வியாழனன்று (செப்.15) அயனாவரத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆ.சாந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி, பொருளாளர் சலோமி, ஆ.பிரியதர்ஷினி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.