விவசாயிகள், தொழிலாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி ஏப்ரல் 5ஆம் தேதி நடைபெறும் பேரணியை விளக்கி விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், சிஐடியு சார்பில் ராணிப்பேட்டையில் பிரச்சார நடைபயணம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எல்.சி.மணி, பொருளாளர் ராதாகிருஷ்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் அ. தவராஜ், பொருளாளர் என்.ரமேஷ், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சந்திரன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் தா.ஞானமுருகன், இருதயநாதன் (மின் ஊழியர் மத்திய அமைப்பு) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.