விடுதலைப் போராட்ட வீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினம் சனிக்கிழமைன்று (மார்ச் 23) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி தி.நகர் கீழ்புதூர் பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த்குமார், பகுதி நிர்வாகிகள் நிதிஷ், தணிகவேல், இம்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.