districts

ரேசன் அரிசி கடத்தியவர் கைது

கிருஷ்ணகிரி, மே 15-

   கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்கிரிபள்ளியில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் இளங்கோ தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 24 மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கார் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில் அவர் மூங்கில் புதூரைச் சேர்ந்த ராஜசேகைர் (24) என்பது தெரிய வந்தது.

   இதையத்து தனிப்படையினர் அவரை கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையில் ஒப்படைத்தனர்.