சென்னை,நவ.30- சென்னையில் கடந்த வாரத்தில் மழை பெய்த போது 37 இடங்களில் மழை நீர் தேங்கியது. ஆனால் தற்போது 192 இடங்களில் மழைநீர் தேங்கியது. வீடுகள், தெருக்களில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். டிராக்டர் மற்றும் மோட்டார் பம்ப் செட் மூலம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டது. அமைச் சர்கள் பி.கே. சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.சேகர், பரந்தாமன், தாயகம் கவி, மயிலை வேலு, ஜெ.கருணா நிதி, ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர் மற்றும் மாநக ராட்சி மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் முன்னிலை யில் மழைநீர் வெளியேற்றப் பட்டது. விடிய விடிய நடந்த மீட்பு பணியில் 50 இடங்களில் மழைநீர் வெளியேற்றப் பட்டது. மீதமுள்ள 142 பகுதிகளில் மழைநீர் வெளி யேற்றும் பணி நடந்து வருகிறது.மேலும் கெங்கு ரெட்டி, நுங்கம்பாக்கம், ஸ்டான்லி சுரங்கப்பாதை யில் மழைநீர் தேங்கியதை ஊழியர்கள் வெளியேற்றி வருகின்றனர். சென்னை யில் புதனன்று 10 செ.மீ. மழை பெய்ததால் மழை நீர் தேங்கியது. மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்கள் மீது தொடர்ந்து விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் இன்னும் ஒரு சில இடங்களில் இருந்து மழை நீரை வெளியேற்ற நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.