சென்னை,டிச.12- சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், 300 தூர்வாரும் இயந்திரங் கள், 177 ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் 60 கழிவுநீர் உறிஞ்சும் இயந்தி ரங்கள் மூலம் மழைநீர் மற்றும் கழிவு நீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரி யம் தகவல் தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநக ராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களி லும் பேரிடர் கால நிவாரணப் பணி கள் மேற்கொள்ளும் வகையில் 15 கண்காணிப்பு பொறியாளர்கள் தலைமையில் 15 செயற்பொறி யாளர்கள் மற்றும் 156 உதவிப் பொறியாளர்கள் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து பகுதி அலுவலகங்களிலும் இரவு நேரங்களில் களப்பணிகளை கண்காணிப்பதற்காக 15 செயற்பொறி யாளர்கள் சிறப்பு அலுவலர்களாக நிய மிக்கப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 321 எண்ணிக்கையிலான கழிவுநீர் நீரேற்று நிலையங்கள் மூலம் கழிவுநீர் உறிஞ்சப்பட்டு 5 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முறையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. கழிவுநீர் செல்லும் பிரதான குழாய்களில் தூர்வாரும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது அடைப்பு ஏதும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதி களிலும் தொடர் கண்காணிப்பு பணி கள் நடைபெற்று வருகிறது. இந்நிலை யில், பொதுமக்கள் கீழ்கண்ட எண்க ளில் தொடர்பு கொண்டு மழைநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார் பிரிவு எண் 044-45674567 (20 இணைப்புகள்) கட்டண மில்லா தொலைபேசிஎண்.1916 என அறிவிக்கப்பட்டுள்ளது.