districts

img

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வினாடிக்கு 600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே, அணையில் அமைந்துள்ள  மின் உற்பத்தி நிலையம் மூலம் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் புதன்கிழமை (நவ.29) திறக்கப்பட்டது.119 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது, 117.1 அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து, வினாடிக்கு 1640 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், வினாடிக்கு 2330 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.