districts

டிக்கெட் கவுண்டர்களை மூடும் ரயில்வே செயலியை பயன்படுத்துமாறு சமானியமக்களுக்கு நிர்பந்தம்

சென்னை.ஜூன் 24-   

     பெரம்பூர் ரயில் நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட நான்காவது நடைமேடையில் உள்ள டிக்கெட் கவுன்டர் திடீரென மூடப்பட்டுள்ளது.

   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன்  கடந்த 22ஆம் தேதி  பீச் ஸ்டேசன் செல்வதற்காக டிக்கெட் எடுக்கச் சென்றபோது, டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்ட போது முதலாவது  நடைமேடையில் உள்ள கவுன்டருக்குச் செல்லுங்கள் என்று அவரிடம் கூறியுள்ளனர்.  இந்த கவுன்டர் வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாக போராடியது. அதன்  விளைவாலும், வட சென்னை நாடாளு மன்ற உறுப்பினரின் முயற்சியாலும், தலையீட்டாலும் உருவாக்கப்பட்டது. எனவே, பெயருக்கு திறந்ததாக காட்டிக் கொண்டு பின்னர் மூடிவிட்டனர்.  முதலாவது நடைமேடையில் உள்ள கவுன்டராவது  செயல்படுகிறதா என  அங்கு அவர்  சென்றபோது அங்கும்  மூடப்பட்டது என போர்டு வைக்கப் பட்டிருந்தது. அங்கிருந்த ஊழியர்  ஒருவர் அங்கு நின்று கொண்டு தனியார் வைத்திருக்கிற வென்டிங் மிஷினில் போய் டிக்கெட் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கவுன்டருக்கு வரும் மக்களை அனுப்பிக் கொண்டி ருந்தார்.  

    இப்படியாக மக்கள் 4ஆவது  நடைமேடைக்கும் முதலாவது நடைமேடைக்கும் அலைக்கழிக் கப்பட்டுக் கொண்டிருந்தனர். அங்கிருந்த ஊழியரிடம் ஏன் புறநகர் ரயில் கவுன்டர் மூடப்பட்டிருக்கிறது என்று சுந்தரராஜன் கேட்ட போது ஆள் பற்றாக்குறை என்றார்.

     உடனே அவர் அங்கிருந்தே ட்விட்டர் மூலம் ரயில்வே அமைச்சகம், தெற்கு ரயில்வே பொது மேலாளர் மற்றும் சென்னை டிவிசன் மேலாளர் ஆகியோருக்கு புகார் செய்தார். அவர் அனுப்பிய புகார் குறித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என ரயில்வே அமைச்சகத்திடமிருந்து உடனே பதில் வந்தது.

    அடுத்த நாள் தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து உங்கள் புகாரை விளக்கமாக தெரிவிக்கவும் என்று பதில் வந்தது. அவரும் விவரமாக புகாரை அனுப்பியவுடன் வருத்தத்தை தெரிவித்துக்கொண்டு சரிசெய்யப்படும் என்று பதில் வந்தது.  சம்மந்தப்பட்ட ரயில் நிலையத் தில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப் படும் என்று சென்னை டிவிசன் மேலாளர்  சொன்னதோடு நீங்கள்  கவுண்டரில் வரிசையில் நிற்பதற்கு  பதிலாக யூடிஎஸ் செயலியை பயன் படுத்துங்கள் என்று தெரிவித்திருந்தார். அவர் சொன்ன யூடிஎஸ் செயலி வேலை செய்யாததால்தான் டிக்கெட்  கவுண்டருக்குச் அவர் சென்றார்.  

    மேலும், மேற்படி செயலியை பயன்படுத்தி எத்தனை பேருக்கு  டிக்கெட் எடுக்கத் தெரியும். அது ஒருபுறம் இருக்கட்டும்.  சாதாரன ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் முக்கிய போக்கு வரத்தாக இருக்கிற ரயில்வேயில் டிக்கெட் கொடுக்க ஆள் இல்லை என்று  கவுன்டர்களை மூடவது சரியல்ல.

     இந்தியாவில் உள்ள 277  மத்திய பொதுத்துறை நிறுவனங்களி லும், மத்திய மாநில அரசு பணி களிலும் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை பூர்த்தி செய்யாமல் அவுட் சோர்சிங் மற்றும் ஒப்பந்த முறை யில் பணிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக ரயில்வேயில் பல பணி யிடங்களை சரண்டர் செய்த பிறகும்  3 லட்சத்து 15 ஆயிரம் காலிப்பணி யிடங்கள் உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவிக்கிறார்.

     2022ஆம்  ஆண்டு ஆகஸ்ட் கணக்கின்படி தெற்கு ரயில்வேயில் மட்டும் 21,868  காலிப்பணியிடம் உள்ளதாகவும், அதில் சென்னை கோட்டத்தில் அதிக பட்சமாக 4,179 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அறிகிறோம். மேற்கண்ட பணியிடங்களை பூர்த்தி செய்யாததால்தான் ரயில் விபத்துக்களை தடுக்கமுடியவில்லை. சிறப்பான சேவையையும் அளிக்க முடியவில்லை.  

    வந்தே பாரத் ரயிலுக்கும் ஆன்மீக  சுற்றுலா ரயிலுக்கும் கவனம் செலுத்தும் ரயில்வே அமைச்சகம் சாதாரன  ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் ரயில்களை  கவனிப்பதில்லை என்றும் எல்.சுந்தரராஜன்  வேதனையுடன் தெரிவித்தார்.