சென்னை, மார்ச் 18- அகில இந்திய ரயில்வே கேன்டீன் தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் கே.சிவசங்கரன் திங்க ளன்று (மார்ச் 18) காலமானார். சிறுநீரக கோளாரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 70. 1970களில் ரயில்வே தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நாடு முழு வதும் எழுச்சியாக நடைபெற்ற போராட்டத் தில் தன்னை இணைந்து கொண்டு களம் கண்டார். போராட்டம் வெற்றி பெற்று பணி நிரந்தரம் பெற்ற அவர் டிஆர்இயு தொழிற் சங்க தலைவர்களுடன் இணைந்து தொழிற் சங்க பணியாற்றினார். தனது பணி காலத்தில் பெரும் பகுதி சாமான்ய மக்களுக் காக போராடுவதிலேயே செலவழித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினரான தோழர் சிவசங்கரன், சமையற்கலை யில் வல்லுனராக விளங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாறா பற்றுக்கொண்ட அவர் தன் குடும்பத்தை இயக்கத்திற்காக முழுவதுமாக ஒப்படைத்தார். அவருக்கு 2 மகள் கள், ஒரு மகன் உள்ளனர். அவரது மனைவி சாரதாம்மா கேரளா மாதர்சங்கத்திலும் மகன் சினு சென்னை உயர்நீதிமன்றத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராகவும் அவரது மருமகள் பா. ஹேமாவதி சிபிஎம் கொளத்துர் பகுதி செயலாளராகவும் பணியாற்றி வருகின்ற னர். தோழர் சிவசங்கரனின் உடல் பாலக் காட்டில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். செவ்வாயன்று காலை பாலக்காடு செர்புலசேரியில் உள்ள அவரது இல்லத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.