வட சென்னை நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். இதையொட்டி சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனையை அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் புதனன்று (மார்ச் 27) திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபிநேசர். ஐட்ரீம் மூர்த்தி, திமுக பகுதிச் செயலாளர்கள் இரா.லட்சுமணன், எஸ்.ஜெபதாஸ் பாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் இளைய அருணா,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா, பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.கு.வெங்கடேஷ் வேம்புலி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.