சிதம்பரம், ஜன.21 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கடலூர் மாவட்ட குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ மாதவன், பொருளாளர் எஸ்.தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளும், மாவட்டக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். தில்லியில் போராடிய விவ சாயிகளுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி களை ஒன்றிய அரசு நிறைவேற்றக் கோரி வரும் 31ஆம் தேதி அனைத்து வட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் நெல் கொள்முதல் நிலையம் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்வது, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நிலம் கொடுத்த விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் உரிய இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாவட்டச் செயலாளராக (பொறுப்பு) ஆர் ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலை வராக ஆர்.லொகநாதன், மாவட்ட இணைச் செயலாளராக வாஞ்சிநாதன், செல்வகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.