districts

விவசாய பம்புசெட்டுகளுக்கு மீட்டர் பொருத்தும் புதுவை அரசு

புதுச்சேரி, ஜூலை 28-

    விவசாயிகளுக்கு கட்டண மில்லா மின்சாரத்தை  பறிக்கும் புதுச்சேரி அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

     புதுச்சேரி அரசு மின் துறையை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு, மின்துறை விற்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஆளும்  என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு ஈடுபட்டு வரு கிறது.

    தனியார்மயத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. ஆனால், குறுக்கு வழி யில் பல்வேறு முயற்சிகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக அதில் ஒரு திட்டம்தான் கட்டணம் இல்லா மல் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகள் உரிமையை பறிக்கும் விதமாக, விவசாய பம்ப் செட்டுக்கு  மின் மீட்டர் பொருத்தும் பணியை செய்து வருகிறது.  

    ஏற்கனவே, ரூ.250 கோடி செலவில் புதிய நவீன மீட்டர் பொருத்தும் பணி துவங்கியுள்ளது. அடுத்த கட்டமாக, பிரீபெய்டு மீட்டர் மாற்றுவார்கள். அப்போது முழுமை யாக பணம் கட்டினால்தான் மின்சாரம் கிடைக்கும். இந்த ஏற்பாடு தனியார் நிறுவனங்கள் கொள்ளைக்கு அரசு வழி வகுத்து கொடுக்கிறது.

    ஏற்கனவே, நெருக்கடியால் தவித்துக் கொண்டிருக்கும்  விவ சாயிகளின் இலவச மின்சார உரிமையை பறிக்கும் நடவடிக் கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    எனவே, மீட்டர் பொருத்தும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்.

     இவ்வாறு ராஜாங்கம் தெரி வித்திருக்கிறார்.