districts

img

சென்னையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் புதிய கட்டிடம் திறப்பு

சென்னை, நவ. 19- சென்னையில் வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பின்  கட்டிட திறப்பு விழா ஞாயிறன்று (நவ. 19) நடை பெற்றது. தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தில் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். சென்னை கே.கே.நகரில் உள்ள டாக்டர் ராமசாமி சாலையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பின்  தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா  தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆச்சி மசாலா நிர்வாக இயக்குநர் பத்மசிங் ஐசக், எஸ்.என்.ஜே நிர்வாக இயக்குநர் எஸ்.என்.ஜெயமுருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினர். இதையடுத்து, வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு வரவேற்றார். மேலும் பேரமைப்பின் கொடியை பொருளாளர் ஏ.எம்.சதகத்துல்லா ஏற்றினார். புதிய கட்டிடத்தில் பா.சிவந்தி ஆதித்தனார் வளாக கட்டி டத்தை லெஜன்ட் குழுமத் தலைவர் சரவணன் திறந்து வைத்தார். யோக ரத்தினம் லெஜண்ட் சரவணா வளா கத்தை கோகுலம் நிறுவனத் தலை வர் கோகுலம் கோபாலன், சிட்டி யூனி யன் வங்கி அரங்கத்தை சிட்டி யூனி யன் முதன்மை செயல் அதிகாரி என்.காமகோடி ஆகியோர் திறந்து வைத்தனர். பேரமைப்பின் அலுவ லகத்தை போத்தீஸ் குழும நிர்வாக இயக்குநர் எஸ்.ரமேஷ், பேரமைப்பின் பத்திரிக்கையாளர் அரங்கத்தை ஹட்சன் அர்கோ நிர்வாக இயக்குநர் ஆர்.ஜி.சந்திரமோகன் திறந்து வைத்த னர். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு மலரை தினமலர் நிர்வாகி ஆர்.ஆர்.கோபால்ஜி வெளியிட அதனை தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்கு நர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் பெற்றுக்கொண்டார். நலிந்த வணி கர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை வசந்த் அன் கோ நிர்வாக இயக்குநர் விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் தலைமை செய லாளர் இறையன்பு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம், வி.ஜி.சந்தோஷம், மெடி மிக்ஸ் நிர்வாக இயக்குநர் ஏ.வி.அணுப், நாகா புட்ஸ் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.கமலக்கண்ணன், ஸ்ரீ லட்சுமி அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.சுதாகர், ஜெ.பி.ஏ. குழுமத்தின் நிர்வாக இயக்குநர் எம்.இ.ஜமாலுதின், சரவணா ஸ்டோர் எலைட் நிர்வாக இயக்குநர் ஒய்.சிவ அருள் துரை, அருள் முருகன் (அரி அண்ட் கோ), எம்.ஜோன்ஸ் (ஜோன்ஸ் பவுண்டேசன்), மீரா நாக ராஜன் (கல்யாணமாலை), வணிகர் பேரமைப்பின் தலைமை செயலாளர் ஆர்.ராஜ்குமார், கூடுதல் செயலாளர் வி.பி.மணி, மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டியராஜன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் எஸ்.சாமுவேல், செயலாளர் ஏ.ஷேக்முகைதீன், பொருளாளர் ஏ.சத்தியரீகன் உள்ளிட்டு மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வணிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.