districts

img

புதுச்சேரி தலைமை செயலாளர் திடீர் மாற்றம்

புதுச்சேரி,ஜன.29- புதுச்சேரி தலைமை செயலாளராக செயல்பட்டு வந்த ராஜீவ் வர்மா மாற்றப்பட்டு புதிதாக டாக்டர் ஷரத் செளஹான் நியமிக்கப்பட்டுள்ளார்.  கடந்த 2022 ஆம் ஆண்டு புதுச்சேரி தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட ராஜீவ் வர்மா, முதல்வர் ரங்கசாமிக்கு தெரியாமலே அரசு செயலாளர்களை தன்னிச்சையாக மாற்றியது தொடர்பாக புகார் எழுந்தது.  மேலும், அரசு கோப்புகளுக்கு அனுமதி கொடுப்பதில் கால தாமதம் செய்கிறார் என்ற புகார் எழுந்தது. எனவே அவரை மாற்ற வேண்டும் என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அவர் அப்பொறுப்பில் இருந்து  மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஒன்றிய உள்துறை அமைச்சகம் திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.