districts

img

உலக மக்கள் அமைதியாக வாழ நட்புறவு அவசியம்

புதுச்சேரி,டிச.5- நாடுகளுக்கு இடையே நட்புறவு ஏற்படுத்துவதன் மூலம் உலக மக்கள் அமைதியாக வாழ வழி ஏற்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசினார். இந்தோ-வியட்நாம் கலை ஞர்களின்  நட்புறவு கலாசார விழா புதுச்சேரி சுற்றுலா துறையின் சார்பில் கம்பன் கலையரங்கத்தில் செவ்வாய் கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு வியட்நாம் கலைஞர்களுக்கு பொன்னாடை போத்தி பாராட்டி னார். பின்னர் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:- வியட்நாம் கலைக்குழுவினர் மிகச் சிறப்பான முறையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். உலக மக்கள் அமைதியாக வாழ வேண்டுமெனில் உலகம் சமாதானமாக இருப்பது அவசியம். இதனடிப் படையில்தான் இந்தோ, வியட்நாம் நட்புறவுக் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.  நாடுகளுக்கு இடையே நட்புறவு ஏற்படுத்துவதன் மூலம் உலக மக்கள் அமைதியாக வாழ வழி ஏற்படும். இதனடிப்படையில்தான்  வியட்நாம் நட்புறவுக் கழகத்தினர் பல நாடுக ளுக்கும் சென்று கலை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.  கலைகள் என்பது மகிழ்ச்சியை அளிப்பதாகும். ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. மக்கள் அனை வரும் அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு சமரசம் என்பது முக்கியமாகும். அதனடிப்படையில் தான் சண்டை,சச்சரவுகள் இன்றி மக்கள் அமைதியாக இருக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் பேரவை தலைவர் ஆர்.செல்வம், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.விஸ்வநாதன், மு.கந்தசாமி, இந்தோ, வியட்நாம் நட்புறவுக் கழகம் புதுச்சேரி துணைத் தலைவர் த.முருகன், நிர்வாகிகள் நாரா.கலைநாதன், வியட்நாம் கலாசார இயக்குநர் லேத்ருங் ஹியூ மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.