districts

img

பேருந்து வழித்தடம் மாற்றம்: பொதுமக்கள் மறியல்

சென்னை, செப். 25- திருவொற்றியூர் மேற்கு  பகுதிகளான ராஜாஜி நகர்,  கார்கில் நகர், வெற்றி விநாய கர் நகர் போன்ற பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் வசிக்கின்றனர். இவர்கள் திருவொற்றியூர் வழியாக தங்கசாலை, பாரிமுனை செல்வதற்கும், மாதவரம், மணலி, மீஞ்சூர் செல்வதற்கும் பக்கிங்காம் கால்வாய் செல்லும் அணுகு  சாலை வழியாக செல்லும் பேருந்து போக்குவரத்தை நம்பி இருந்தனர். மணலி, திருவொற்றி யூர் செல்லும் பக்கிங்காம்  கால்வாயின் உயர்மட்ட  மேம்பாலம் திறக்கப்பட்ட தால், அந்த வழியாக சென்று  கொண்டிருந்த பேருந்துகள் மேம்பாலம் வழியாக மண லிக்கு சென்று வருகிறது.  இதனால் தங்கள் பகுதி வழி யாக சென்று கொண்டிருந்த பேருந்துகள் மீண்டும் இயக்கக் கோரி 50க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த திரு வொற்றியூர் காவல் துறை யினர் அதிகாரிகளிடம் பேசி  உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனை வரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.